பேசுவதில் பேராற்றல் மிக்கவன் மனிதன். ஆனால் அவனுடைய பேச்சில் அதிக பாகம் உபயோகமற்றது; முறையற்றது. மிருகங்களுக்கு பேசும் ஆற்றலை இறைவன் தரவில்லை. ஆயினும் அவைகளின் பங்களிப்பு சமூகத்துக்கு பலவழிகளில் உபயோகமாக இருப்பதைக் காண்கின்றோம். எனவே மனிதா, நீயும் அறிவைப் பயன்படுத்தி பயனுள்ள விடயங்களையே பேசவேண்டும். எவனொருவன் தன் வாக்கில் நாணயமுடையவனாக இருக்கிறானோ அவனைச்சுற்றி எப்பொழுதும் நல்லவர்கள் மட்டுமே இருப்பார்கள். (இந்துதர்ம சாத்திரம்)
உண்மையான மதம் என்பதுதற்கால மனிதன் மறந்துபோய் விட்ட ஒரு மொழியாகி விட்டது. மதம் கற்றுத் தந்த அன்பு, கருணை, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுதல் இவைகளை நாம் மறந்து விட்டோம். இன்று உலகில் காணும் பிரச்சினைகள் அனைத்திற்கும் அடிப்படைக் காரணம் அன்பும், கருணையும் இல்லாததே. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்கள், நாட்டில் ஏற்படும் குழப்பங்கள், உலக அளவில் ஏற்படும் குழப்பங்கள் இவை அனைத்தும் மதக்கோட் பாடுகளை நாம் சரியாகக் கடைப் பிடிக்காததால் உருவானதாகும்.,
வாழ்க்கையில் ஏற்படும் துயரங்களை வெல்ல என்ன செய்ய வேண்டும்? எப்படி செயல்பட வேண்டும் என்று பலருக்கு தெரிவதில்லை யாரோ ஒருவர் கஷ்டப்படும் போது உபதேசம் செய்ய துணியும் நாக்குகள் அதே துன்பம் தனக்கு வரும் போது மெளனமாக ஆகிவிடுகிறது அது ஏன்? எது நன்மை எது தீமை என்று அறிய முடியாத அறியாமை தான் காரணம். வாழ்க்கை என்பது துன்பமயமானது என்று பலர் சொல்கிறார்கள் ஆனால் அது உண்மையல்ல வாழ்ந்து முடித்தவர்களின் வாழ்க்கையையும்..,
காரைக்கால் அம்மையார்
- ஒரு ஆன்மீகப்பார்வை- தொகுப்பு:கங்கைமகன்
கணவனால் தெய்வமாகத் தொழப்பட்ட ஒரு மானிடப் பெண்ணின் உண்மை வரலாறு. புனிதவதி என்ற இயற்பெயர் கொண்ட ஒருவர் இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட பின்னர் தான் பிறந்து வளர்ந்த ஊரின் பெயரை முதற் பெயராகக் கொண்டு வாழ்ந்தவர்தான் காரைக்கால் அம்மையார். இவர் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நாயன்மார்களில் காலத்தால் மூத்தவர் இவர் ஆவார். இறைவனால் அம்மையே என்று அழைக்கப் பெற்ற பெருமை உடையவர்.
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்” (குறள்). ஒருவரைப் பழிவாங்கிவிடுவதில் அவருக்கு இருக்கும் ஆணவம் தற்காலிகமாகத் திருப்தி அடைகிறது. அது அந்தச் சந்தர்ப்பத்தில் கிடைக்கும் இன்பம்தான். ஆனால் ஒருவரை மன்னிப்பதில் பேரின்பம் இருக்கிறது. மன்னிப்பவர்களை மரணம் வரையிலும் அவரது புகழ் தொடர்கிறது.
இறைவன்மேல் உறுதியான
மனம் வேண்டும். தொகுப்பு;நளாயினி தியாகலிங்கம்
இறைவன் தன்னை அறிய முயற்சிப்பவர்களுக்கு உதவ தயாராக காத்துகொண்டிருக்கிறான் ஆனால் யாரும் அவனை கேட்பதுமில்லை,விரும்புவதுமில்லை அவனிடம் செல்பவர்கள் எல்லாம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு மட்டுமே கேட்கின்றனர் அதற்காக எத்தனை துன்பங்களை வேண்டுமானாலும் அனுபவிக்க தயாராக இருக்கின்றனர்
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே" பக்தி இலக்கியம் என்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்லவர் காலம் என்று அழைக்கப்படுகின்றது. இக்காலத்தில்தான் சைவம் என்ற மதம் தமிழ் இலக்கியத்தில் எக்காலத்திலும் இல்லாதவாறு அதனை மக்கள் மனங்களில் பிரவாகம் அடையச் செய்தது. பிற மதங்கள் சைவத்தை மக்கள் மனங்களில் இருந்து அகற்றி தாங்கள் குடிபுகவந்த வேளை சமயகுரவர்கள் தோன்றி அக்காலச் சமுதாய வரலாற்றையே மாற்றி அமைத்தனர்.
பித்தாப்பிறை சூடி கடல்சூழ்ந்த பூவுலகை வாழ்விக்க வந்த சைவசமய குரவருள் சுந்ததரை ஒரு அவதாரமாகவே சேக்கிழார் தன் பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். சிவபிரானுக்கு வழிவழி தொண்டு செய்யும் குலத்தில் இவர் பிறந்தவராதலால் இவரது பெற்ரோர்களும் சிவனுக்கு அடிமையாகவே வாழ்ந்தார்கள் என்பது வரலாறு. இவரது பிறப்பைக் கூறவந்த சேக்கிழார் தனது பாடலில் இவரை அவதாரம் என்றே குறிப்பிடுகின்றார்.