ஒவ்வொரு மனிதனிடன் இருக்கும் மிகப்பெரிய சக்தி காமம்.இதனை வைத்துதான் ஆன்மீக பாதையில் முன்னேற்றம் அடைய வேண்டும். விந்து கீழ் நோக்கி சென்றால் காமம், மேல்நோக்கி சென்றால் ஆன்மீகம்.
கர்மாவின் கணக்கை தீர்ப்பவன் இறைவன் மட்டுமே அவன்தான் ஜனாதிபதிஇ அவனிடம்தான் உங்களின் கணக்கு உள்ளது. ஜனாதிபதி பார்த்து தூக்கு தண்டனை நிறுத்துவது போல உங்களின் கர்மா பயனை நிர்ணயிப்பன் கடவுள் மட்டுமே.
ஆடு தன் கர்மவினைகளை வளர்ப்பவன்இவெட்டுபவன், திண்பவன் என்று தன் உடலை தந்து தன் கர்ம பலனை குறைத்து கொள்கிறது. எந்த ஒரு உயிரும் சுவாசிப்பதற்கு கூட சில கர்மாவை செய்துதான் ஆக வேண்டிள்ளது. நாம் சுவாசிக்கும் போது கூட சில உயிர்கள் இறக்கின்றன். இதுவும் கர்மாவின் சேரத்தான் செய்யும்.
ஆன்மீகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது. எவ்வளவு தூரம் விலகுகிறீர்களோ அவ்வளவு தூரம் நெருங்கி இருக்கிறீர்கள். உன்னிடம் இருந்து விலகினால் மட்டுமே அவனை நெருங்க முடியும்.